திரையில் முகம் காட்டாத
இந்த ''பட்டாம்பூச்சி விற்பவன்'' மீது
எவ்வளவு காதல்...!!! எவ்வளவு காதல்...!!!
எவ்வளவு காதல்...!!! எவ்வளவு காதல்...!!!
தன்னுடனான காதலை
மாந்தனின் மனதில்
சொந்தமின்றி பந்தமின்றி
பாட்டலே விதைத்துவிட்டான்...!!
மாந்தனின் மனதில்
சொந்தமின்றி பந்தமின்றி
பாட்டலே விதைத்துவிட்டான்...!!
ஃபேஸ்புக் மகா சமுத்திரத்தில்
அகம், புறம், இடம், வலம்
எங்கு செல்லினும்
இவனது பட்டாம்பூச்சிகள் இட்ட
கண்ணீர்துளிகளின் வாடைதான்...!!
அகம், புறம், இடம், வலம்
எங்கு செல்லினும்
இவனது பட்டாம்பூச்சிகள் இட்ட
கண்ணீர்துளிகளின் வாடைதான்...!!
நானொன்றும்
கூனவில்லை குருகவில்லை.
கண்ணீரும் சிந்தவில்லை - கதறியழ
யார் மடியும் தேடவில்லை...!!
கூனவில்லை குருகவில்லை.
கண்ணீரும் சிந்தவில்லை - கதறியழ
யார் மடியும் தேடவில்லை...!!
இவனது எழுத்துக்களை
அள்ளிக்கொண்டு - அதை
ஊரெங்கும் தூவிக்கொண்டு
ஆத்மாவை தேடித்திரியும்
அந்த பட்டாம்பூச்சிகளை
வெறுமனே ''வேடிக்கை பார்ப்பவன்'' ஆகி நிற்கிறேன்
விழிகளிலிருந்து வெளியேறி...!!
அள்ளிக்கொண்டு - அதை
ஊரெங்கும் தூவிக்கொண்டு
ஆத்மாவை தேடித்திரியும்
அந்த பட்டாம்பூச்சிகளை
வெறுமனே ''வேடிக்கை பார்ப்பவன்'' ஆகி நிற்கிறேன்
விழிகளிலிருந்து வெளியேறி...!!
[பி.கு:- எங்கு பார்த்தாலும் ஒரே இரங்கற்பாவாகவும், கத்தல் கதறலாகவும் இருக்கிறது. கடந்த 10 நாட்களில் தமிழ்த் திரையுலகம் இழந்த ஜம்பாவான்களுள் கவிஞர் நா. முத்துக்குமாருக்கு சமர்ப்பிக்கப்படும் சோகத்தின் அழுத்தமே என்னை இவ்வாறு எழுத வைத்துவிட்டது. அன்னாருக்கு எனது அஞ்சலி]