Tuesday, 22 November 2016

நேந்திரம்பழம் கறி (சமையல்)



தேவையான பொருட்கள்:

நேந்திரம்பழம் - 3 
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 2
தக்காளிப்பழம்  - 2
கடுகு+உளுந்து - அரை தேக்கரண்டி
சீரகம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைத்த பச்சை மிளகாய் - 3 தேக்கரண்டி 
முந்திரி & கருப்பு உலர் திராட்சை (அல்லது) நிலக்கடலை  - தேவையான அளவு

வாசனைக்காக:
கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு
இலவங்க பட்டை - சிறிதளவு
உலர் ரோஜா இதழ்கள் - 5 இதழ்கள்
(பட்டை, இலவங்கம், ரோஜா இதழ் மூன்றும் சேர்த்து பிரியாணி மடிப்பு என மளிகையில் கிடைக்கும்)


ஆலிவ் எண்ணெய் / சுத்தமான தேங்காய் எண்ணெய் / கடலை எண்ணெய்

ஆலிவ் - பத்தியத்தில் இருப்பவர்கள் பயன்படுத்தலாம்
சுத்தமான தேங்காய் எண்ணெய் - கேரளத்து சுவை விரும்பிகளுக்காக.  
கடலை எண்ணெய் - சத்து மிகுந்தது; தோலுக்கு நல்லது; சுவையூட்டிக்காக பயன்படுத்தலாம்.
அல்லது
வாசனைக்காக நெய் பயன்படுத்தலாம்.



செய்முறை:

முதலில் நேந்திரம்பழத்தை இரண்டாக அரிந்து, அதை குக்கரில் போட்டு 3 விசில்கள் வரை விட வேண்டும்.

குக்கர் வேலை முடிந்ததும்...
  • வானலியில் எண்ணெ/ நெய்யை ஊற்றி, வழக்கம்போல கடுகு உளுந்தை பொறித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு, சீரகம், நிலக்கடலை,  பச்சை மிளகாய் சாந்து, கருவேப்பிலையை வாசனை வரும்வரை நன்கு வதக்கவும்.
  • அடுப்பில் அனல் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நடுநிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • வெங்காயத்தை மட்டும் முதலில் போட்டு வதக்கினால், பதார்த்தம் சுவையுடன் மட்டுமின்றி, நல்ல வாசனையுடனும் கிடைக்கும். (வெங்காயம் ஆண்மைக்கு நல்லது)
  • மேற்கூறிய அனைத்தையும் செய்த பிறகு, வதக்கலை வானலியிலே வைத்துக்கொள்ளுங்கள்.  
  • வாழையும் வதக்கலும் இரண்டரக்கலந்து செம்மஞ்சள் நிறமாக மாறும் வரை, கிளறி விடவேண்டும். 
  • இதை செய்யும்போது, அடுப்பு அனல் கதகதப்பாகவே இருக்க வேண்டும். வெப்பம் அதிகரித்தால் பதார்த்தம் அடிப்பிடித்து தீய்ந்துவிடும். 
  • கிட்டத்திட்ட பதார்த்த பதம் பஞ்சாமிர்தம் போல வந்ததும், வானலியை இறக்கவும்.


#அருண்வினோ