Sunday, 29 March 2015

கேள்வியும் பதிலும்:: இந்தியாவின் தாய்மொழி ஹிந்தி ? அல்லது கட்டாய மொழி ?

நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி:தமிழ் தமிழ் எனக்கூறி இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தியை என்னிடம் இருந்து பிரிக்கிறீர்கள். ஏன்? நாம் இந்தியர் இல்லையா? நீங்கள் ஏன் எங்களை முட்டாள்கள் ஆக்குகிறீர்???

எனது பதில்:
சும்மா இந்தியன் என்று கராக்கரா என கத்தக்கூடாது.இன்றைய இந்தியா எப்படிப்பட்ட நாடு என்பதை நன்கு உணர்ந்த பின்னரே நான் இந்தியன் என்று மார்தட்டி சொல்லவேண்டும்.
இனம், மதம், மொழி என எல்லாவற்றிலும் பரந்துவிரிந்த பன்முகம் கொண்ட நாடே "இன்றைய இந்தியா".
எல்லாவற்றிலும் முற்றிலுமாக வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் நாட்டு மக்கள் அனைவரும் "மனிதம்" என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழும் நாடுதான் நமது இந்தியா.
இதுதான் நம் நாட்டின் மாபெரும் அடையாளம்.
அப்படியிருக்கையில் ஒரு அரசியல் கட்சியோ அல்லது குறிப்பிட்ட இயக்கமோ தனது கலாச்சார உத்திகளை இன்னொரு இனம்/மதம்/மொழி சார்ந்த மக்களின் மண்டையில் திணிக்க நினைப்பது என்பது இந்த தேசத்திற்கு துரோகம்செய்வதற்கு சமம்.
அதேபோல் தான் நீங்கள் கேட்ட கேள்விக்கும் பதில். உயர்த்திக்காட்டப்படும் இன்னொரு தரப்பினருடைய மொழியை நம்மவர் பெரிதென கண்டால் அதைவிட கொடிய செயல் வேறு இல. நமக்கு விருப்பம் இருந்தால் அல்லது தேவை எனப்பட்டால் அம்மொழியை நாம் கற்றுக்கொள்ளலாமே தவிர அதையே இந்திய நாட்டின் தாய்மொழியாக கருதக்கூடாது. அது வறுத்தெடுத்த மடமை.
இந்தியாவிற்கென குறிப்பிட்ட ஒரு தாய்மொழி என்று எதுவும் கிடையாது. ஆனால் தற்கால இந்தியாவின் "அலுவல் மொழியாக மட்டுமே ஹிந்தி"அங்கிகரிக்கப்பட்டுள்ளது என்பதில் தெளிவு அவசியம். நீங்கள் அரசு பணிகளுக்கோ வடநாட்டு வேலைகளுக்கோ செல்ல விரும்பினால் ஹிந்தி மொழியை கற்கலாம். அதைவிட்டுவிட்டு ஏதோ ஒரு தீயசக்தி கிளப்பிவிட்டுள்ள புறம்பான கொள்கையை நம்பி நாட்டில் அமைதியை சீர்குழைக்கவேண்டாம்.

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் 'சரியான புரிதலுடன் மட்டுமே.


மேலும் விவரங்களை அறிய: 


வாழ்க தமிழியம் வாழிய இந்தியம் 
ஆக்கம்:அருண்வினோ 



No comments:

Post a Comment