இந்த பித்தனுக்கென
இன்ன இடமுமில்லை, குணமுமில்லை.
இன்ன இடமுமில்லை, குணமுமில்லை.
சடையை வரிந்துக்கட்டியும்
சில நேரங்களில் அவிழ்த்து பறக்கவிட்டும் திரிவான்...!!
கபாலத்தை ஏந்திக்கொண்டு பிச்சையெடுக்கவும் ஓடுவான்...!!
ஓடியாடும் அரவங்களை அங்கத்தில் கட்டிக்கொண்டும் வித்தையாடுவான்...!!
புலிகளை வேட்டையாடி தோல் படுக்கையும் நெய்வான்...
கிறுக்கன்; பிணச் சாம்பலை பூசிக்கொண்டும் கூத்தாடுவான் ...!!
இவனால் பித்தான சித்தனுக்கும் மீளா அடிமையாவான்...!!
தமிழ்ப் பாட்டுக்கும், புட்டுக்கும் எச்சில் ஒழுக்குவான்...
நிலாவைக் கிள்ளி பூவாய் பின்னிக்கொண்டு, அதற்கு தண்ணீரும் ஊற்றுவான்...!!
நான் மட்டுமல்ல,
இவனை உயிரொடு கொண்ட தொண்டன் எவனும் எவ்வாறினும் வசைக்கலாம்.
கொஞ்சம் கூட வஞ்சிக்கமாட்டான்.
புண்முறுவல்தான் பூப்பான்.
சில நேரங்களில் அவிழ்த்து பறக்கவிட்டும் திரிவான்...!!
கபாலத்தை ஏந்திக்கொண்டு பிச்சையெடுக்கவும் ஓடுவான்...!!
ஓடியாடும் அரவங்களை அங்கத்தில் கட்டிக்கொண்டும் வித்தையாடுவான்...!!
புலிகளை வேட்டையாடி தோல் படுக்கையும் நெய்வான்...
கிறுக்கன்; பிணச் சாம்பலை பூசிக்கொண்டும் கூத்தாடுவான் ...!!
இவனால் பித்தான சித்தனுக்கும் மீளா அடிமையாவான்...!!
தமிழ்ப் பாட்டுக்கும், புட்டுக்கும் எச்சில் ஒழுக்குவான்...
நிலாவைக் கிள்ளி பூவாய் பின்னிக்கொண்டு, அதற்கு தண்ணீரும் ஊற்றுவான்...!!
நான் மட்டுமல்ல,
இவனை உயிரொடு கொண்ட தொண்டன் எவனும் எவ்வாறினும் வசைக்கலாம்.
கொஞ்சம் கூட வஞ்சிக்கமாட்டான்.
புண்முறுவல்தான் பூப்பான்.
என் உயிரறையின் நிசப்தத்தையும் காதலையும் அள்ளியள்ளிப் பருகினாலும், விடாபிடியாக குழாயிட்டு உறுஞ்சினாலும், நாளையும் மாவேட்கையாளன் ஆவான் இந்த அடங்காப்பிடாரன்.
இன்னும் எதைக் கொடுத்து இவனது தாகம் தணிப்பேன்....?
ஆங்...
கண்ணப்பனை போல தடித்த பித்தனென்றால் இவனுக்கு அலாதியான பிரியம்.
கல்லுக்குள் புகுந்திருந்து கண்ணைக் கூட கேட்டு வாங்கிவிடுவான் கள்ளன்.
என் உயிரையே ஆட்கொள்பவனுக்கு
கண்ணையா கொள்ள முடியாமல் போய்விடும்?
உள்ளேயே குதித்துவிட்டான்.
விழி-படல்-நரம்பென அனைத்தையும் இறுக்கிப்பிடித்து,
கண்-நீரைப் பிழிந்து சுவையாடிக் களிக்கிறான்.
நானும் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.
நாளையும்.... நாளும்....!!
#அருண்வினோ
இன்னும் எதைக் கொடுத்து இவனது தாகம் தணிப்பேன்....?
ஆங்...
கண்ணப்பனை போல தடித்த பித்தனென்றால் இவனுக்கு அலாதியான பிரியம்.
கல்லுக்குள் புகுந்திருந்து கண்ணைக் கூட கேட்டு வாங்கிவிடுவான் கள்ளன்.
என் உயிரையே ஆட்கொள்பவனுக்கு
கண்ணையா கொள்ள முடியாமல் போய்விடும்?
உள்ளேயே குதித்துவிட்டான்.
விழி-படல்-நரம்பென அனைத்தையும் இறுக்கிப்பிடித்து,
கண்-நீரைப் பிழிந்து சுவையாடிக் களிக்கிறான்.
நானும் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.
நாளையும்.... நாளும்....!!
#அருண்வினோ

No comments:
Post a Comment